செப் 10.சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் சுற்றுவட்டார பகுதிகளில் சட்டவிரோதமாக அரசு மதுபானம் விற்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம்கோயல் உத்தரவின் பேரில் மாவட்டத்தின் வாழப்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார்அறிவுறுத்தலின்படி
ஏத்தாப்பூர் காவல் ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில். சிவாஜி.நிர்மலா காவல் உதவி ஆய்வாளர்கள். வெங்கடாசலம்ssi. சரவணன்.பாபு.மீனா. ஆகியோர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர் இதில் வெள்ளாளப்பட்டி 2 நபர்களிடம் இருந்து 20பாட்டில்களும்.ஆரியபாளையம்.உமையாள்புரம்.2 நபர்களிடம் 16 பாட்டில்களும். அதிகாலை முதல் தேடுதல் பணியில் ஈடுபட்ட போது பிடிபட்டது.

வெள்ளாளப்பட்டி பகுதியைச் சேர்ந்த மணி மற்றும் சித்ரா ஆரியபாளையம் பகுதியைச் சேர்ந்த செல்வம் உமையாள்புரம் பகுதியைச் சேர்ந்த முருகன் அவர்களிடமிருந்து சட்டவிரோதமாக அரசு மதுபானங்களை விற்றது தெரியவந்தது ஏத்தாப்பூர் போலீசார் நான்கு பேரை கைது செய்து அவர்களிடமிருந்து அரசு மதுபானங்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மா அருள்நேரு தலைமை செய்தியாளர்.
